கொழும்புல் தனியார் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் தனுஜ பிரேமசிறி தனது வகுப்பில் கல்விகற்கும் மாணவருடன் தொலைபேசியில் பேசிவந்துள்ளார். குறித்த ஆசிரியை தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் Whats app மூலம் மாணவனுடன் பேசியுள்ளார்.
குறித்த விடயத்தினை அவதானித்த மாணவனுடைய நண்பர்கள் குறித்த மாணவனை ஆசிரியை காதலிப்பதாக மாணவனை நக்கல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
குறித்த விடயம் நாளடைவில் பாடசாலையில் பரவி விடயம் கல்லூரியின் முதல்வர் வரை சென்றுவிட குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியை கண்டிக்கப்பட்டதுடன் மாணவனும் வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் இடம்பெற்ற பின்னர் குறித்த ஆசிரியையுடன் வேறு ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் குறித்து ஆசிரியை மாணவன் விடயம் தொடர்புபடுத்தி தவறான உறவு பேணுவதாக விமர்சிக்கப்பட்டமையினால் மனமுடைந்த ஆசிரியை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.